ஐபிஎல் ஆட தடை இருந்தாலும் அணியின் பயிற்சியாளர் குழுவில் இவர் இணைவார்!!

பிசிசிஐ ஐ.பி.எல். போட்டியில்  விளையாட முடியாதபடி தகுதி நீக்கம்  செய்த அறிவித்த வீரரை தங்களுடையபயிற்சியாளர் குழுவில்  இடம் பெறுவார் என கொல்கத்தா  அணி அறிவித்துள்ளது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே. 48 வயதாக இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த 2018-ம்  வருடம்  கிரிக்கெட்டில் இருந்து   ஓய்வு பெறுவதாக தெரிவித்து, அபு தாபியில் நடைபெற்ற டி10  லீக் போட்டியில்பங்கேற்றார்.

இதனால்  இவர் ஐபிஎல்  ஆட்டங்களில்   விளையாடுவதற்கு தகுதி நீக்கம்  செய்ததாக பிசிசிஐ  தெரிவித்தது.  இதன்பிறகு இவர்வெளிநாடு  கிரிக்கெட் லீக்கில்  விளையாட  விருப்பப்பட்டார்.  இதில்  சென்ற சில  நாட்களுக்கு முன் நிறைவுபெற்றகரீபியன் பிரிமீயர் லீக்  தொடரிலும் விளையாடியுள்ளார்.

இதனிடையே  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள்  அடங்கிய குழுவில்பிரவீன் தாம்பே இடம்  பெறுவார்என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  உரிமையாளர்வெங்கி மைசூர்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version