சஞ்சு சாம்சன் மீண்டும் அசத்தல் அரைசதம் :ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

சஞ்சு சாம்சன்,ஸ்மித்,திவாதியாவின் அரைசதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.

ஷார்ஜா:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது..அதனை தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அகர்வால் சதம்,கேப்டன் ராகுல் அரை சதம் அடிக்க,20 ஓவர் முடிவில் 223 ரன்களை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடித்து ராஜஸ்தான் அணிக்கு 224 இலக்காக கொடுத்தது.அதன் பிறகு ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஸ்மித்,பட்லர் களம் இறங்கினர்.காட்ரெல் போட்ட முதல் ஓவரில் ஸ்மித் 2 பௌண்டரி அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார். காட்ரெல் வீசிய 3 வது ஓவரில் ஜாஸ் பட்லர் 4 ரன்களுடன் வெளியேற,அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் வந்த முதல் பந்தே ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து ரன் வேட்டையை தொடங்கினார்.மறுமுனையில் சமி பந்தை ஸ்மித் 1 சிக்ஸர்,1 பௌண்டரி எல்லை நோக்கி விரட்ட,4 ஓவர் முடிவில் 44 ரன்களை கடந்தது ராஜஸ்தான் அணி. அடுத்து ரவி வீசிய 5 வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 சிக்ஸர்,1 பௌண்டரி அடித்து அணியின் எண்ணிக்கை 50 கடக்க உதவி செய்தார்.

இருவரும் தொடர்ந்து அடித்து ஆட ரன் மின்னல் வேகத்தில் பறந்தது.அடுத்து ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் 26 பந்துகளில் 50 ரன்களை கடந்து அணியின் எண்ணிக்கையும் 100 ரன்கள் 8.5 கடந்தது.அடுத்தே பந்தே ஸ்மித் நீசம் பந்தில் சமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 104 ரன்கள் எடுத்து இருந்தது.மேக்ஸ்வல் போட்ட 11.4 வது ஓவரில் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் இந்த சீசனில் 2 வது அரை சதத்தை கடக்க,மறுமுனையில் ராகுல் திவாதியா 20 ஓவர் மேட்சில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி கொண்டு இருந்தார். நீசம் வீசிய 13.1 வது ஓவர் முதல் பந்தே சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,அடுத்த ஓவர் திவாதியாவும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்தார்.15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழந்து 140 ரன்கள் எடுத்து இருக்க,மேக்ஸ்வல் வீசிய 16 வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.24 பந்துகளுக்கு 63 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவை என்ற நிலையில் சமி போட்ட முதல் பந்தில் சஞ்சு சாம்சன் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்து வந்த உத்தப்பா தொடர்ந்து 2 பௌண்டரி அடித்து ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்க, அடுத்து காட்ரெல் வீசிய ஓவரில் திவாதியா 5 சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டார்.

12 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ராபின் உத்தப்பா 9 ரன்களுடன் வெளியேற,அடுத்து களம் இறங்கிய ஆர்ச்சர் வந்த உடனே 2 சிக்ஸர் அடித்து அசத்த,9 பந்துகளில் 9 ரன்கள் தேவை ராஜஸ்தான் அணிக்கு.மறுமுனையில் திவாதியா ஒரு சிக்ஸர் அடித்து 50 ரன்கள் கடந்து அடுத்தே பந்தே அவுட் ஆகி வெளியே சென்றார்.இப்பொழுது 6 பந்துகளில் 2 ரன் தேவை என்ற நிலையில் முருகன் அஸ்வின் போட 2 வது பந்தில் பராக் கிளீன் போல்ட் ஆகி ரன்கள் எதுவும் இன்றி வெளியேற,அடுத்து வந்த டாம் கர்ர்ன் ஒரு பௌண்டரி அடித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற செய்தார்.ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் இதுவே ஆகும்.

தொடர்ந்து இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version