மும்பை இந்தியன்ஸ் கடைசி நேரத்தில் ரன் வேட்டை:ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்கு

சூர்ய குமார் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக வழங்கியது.
surya kumar

அபு தாபியில் நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.மும்பை இந்தியன்ஸ் சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா,டி காக் களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் இருவரும் சிறந்த தொடக்கம் தர,மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டு இருந்தது.

தொடர்ந்து அடித்து ஆடிய டி காக்(23 ரன்கள்,15 பந்துகள்) இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய 5 வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் கேப்டன் ரோஹித்வுடன் இணைத்தார்.இருவரும் சேர்ந்து கிடைத்த பந்துகளை பௌண்டரிகளை விரட்ட, கேப்டன் ரோஹித் சர்மா(35 ரன்கள்,23 பந்துகள்) ஷ்ரேயாஸ் கோபால் வீசிய 10 வது ஓவரில் ராகுல் திவாதியாவிடம் நடையை கட்ட,அடுத்து வந்த இஷான் கிஷன் 0 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின் களம் இறங்கிய குர்னால் பாண்டியாவும் 12 ரன்களில் வெளியேற,மும்பை அணி 14 ஓவர் முடிவில் 117 ரன்கள் எடுத்து இருந்தது.தொடர்ந்து ஆடிய சூர்ய குமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை கடக்க,மறுமுனையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பௌண்டரிகளை விரட்டினார்.டாம் கர்ர்ன் வீசிய 17.3 வது பந்தில் மும்பை அணி 150 ரன்களை கடக்க,அதே ஓவரில் ஹர்திக் பாண்டியா கொடுத்த கேட்சை தவறவிட்டார் சாம் கர்ர்ன்.சூர்ய குமார் யாதவ் மறுமுனையில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து நொறுக்க,மும்பை அணி 18 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து சூர்ய குமார் பட்டையை கிளப்ப,கடைசி ஓவர் வீசிய ராஜ்புட் பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் பறக்கவிட,20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக வழங்கியது.

சூர்ய குமார் யாதவ் 79 ரன்களுடனும்,ஹர்திக் பாண்டியா 30 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Exit mobile version