தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க,திருத்த சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க,திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

ஜனவரி 1 ம் தேதியை வாக்காளர் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தமுறை கொண்டுவரப்பட்டது.அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடம் மாறிய விவரங்களை சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை கடந்த மாதம் 16 ம் தேதி முதல் இந்தமாதம் 15 ம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கு கடந்த நவம்பர் மாதம் 21 மற்றும் 22 ம் தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டது ஏற்கனவே 3 சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்த நிலையில் இறுதி வாய்ப்பாக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Read more –கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுக்கிறது : பினராயி விஜயன் குற்றசாட்டு

வாக்காளர் விண்ணப்ப படிவங்களை அளிப்பதற்கு வரும் டிசம்பர் 15 ம் தேதியுடன் கால அவகாசம் முடிவுக்கு வருவதால், இன்றும் பலர் விண்ணப்ப படிவங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 20 ம் தேதியன்று இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version