
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்த அறிமுக நடிகர் சாலை விபத்தி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் தயாராகி வரும் படம் செங்குன்றம். இதில் ஜெயக்குமார் (40) என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், கதாநாயகனாக அவர் நடித்து வந்த முதல் படம் இதுதான்.
சென்னை அருகேவுள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர் ஜீவா தெருவில் வசித்து வரும் இவர், நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயக்குமார் படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, அறிமுக நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தது பலரையும் சோகமடையச் செய்துள்ளது.
