மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் 12-ந் தேதி முதலே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது, பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்துவைக்கப்பட்டது.இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ள காரணமாக அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீர் திறப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பார்த்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆனது 85.16 அடியிலிருந்து 84.34 அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 142 கன அடியிலிருந்து வினாடிக்கு 226 கன அடியாக சற்று அதிகரித்து இருக்கிறது. அணையின் நீர்மட்டமானது தற்போது இருப்பு 46.41டி.எம்.சி ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா பாசனத்திறகாக அதிகாரிக்கப்பட்ட நீர் திறப்பு
-
By mukesh

Related Content
விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!
By
daniel
July 31, 2026
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை - மாணிக்கம் தாகூர்
By
daniel
July 31, 2026
ISI முத்திரை இல்லாத பொருட்கள் - ₹.2 லட்சம் அபராதம்
By
daniel
July 31, 2026
" இது சுத்தமான அரசியல் சதி... " - கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் ... பின்னணியில் யார்?
By
Jansi
February 28, 2026
மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!
By
Jansi
January 28, 2026
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025