சாதிவாரி கணக்கெடுப்பு கோரி வேல்முருகன் ஆர்ப்பாட்டம்

நாளை தமிழகம் முழுவதும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 16-08-2022

நேரம்: காலை 10 மணி

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version