சற்று முன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக தேர்தல் ஆணையம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து புகார் அளிப்பதற்கான இலவச எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால் அதனை பெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் “புகார் மையம்” அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மையம் 15.09.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த புகார் மையத்தில் 24.09.2021 வரை 285 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உரிய விளக்கங்கள் தகவல்கள் / தெளிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகார்களின் தன்மைக்கேற்ப அவை சம்மந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக ஆய்வு செய்து புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிந்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்வரை இப்புகார் மையம் தொடர்ந்து இயங்கும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

புகார் மைய எண்கள்

1) 1800 425 7072

2) 1800 425 7073

3) 1800 425 7074

Exit mobile version