வரும் 18 அல்லது 19-ல் மருத்துவ படிப்பு கவுன்சிலிங் தொடங்கும்அமைச்சர் அறிவிப்பு

வரும் 18 அல்லது 19 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாயின.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தன. இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுமார் 50 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 108 ஆம்புலன்ஸ்க்கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். ஊபர், ஓலா செயலிகள் போல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் பொதுமக்கள் காண முடியும். வரும் 18 அல்லது 19-ம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Exit mobile version