பிரேசிலில் ராணுவ உடையில் வந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி

பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், அராகுரூஸ் என்ற சிறிய நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் ஆகிய இரு கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்து உள்ளனர்.

அராகுரூசில் உள்ள 2 பள்ளி கூடங்களில் கோழைத்தன தாக்குதல் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தி, விரைவில் புதிய விவரங்கள் வெளியிடப்படும் என மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் தெரிவித்து உள்ளார்.

எனினும், தாக்குதல் நடத்திய நபருக்கு 16 வயது இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த இரட்டை தாக்குதலுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Exit mobile version