பாகிஸ்தானில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரின் காது,மூக்கு, உதடுகளை அறுத்த கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஜங் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் காசிம் ஹயத். இவரை முகமது இப்திகர் என்பவர் கடத்திச் சென்று தனியிடத்தில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், காசிம் ஹயத், இப்திகர் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் போட்டோக்களை காட்டி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.
இப்திகர் போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தன் நண்பர்களுடன் சேர்ந்து இப்திகரை கடத்தி காது, மூக்கு மற்றும் உதடுகளை அறுத்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இவ்வாறு கூறினர்.
