திருவாரூர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர், தேனி மாவட்டங்களில் தொடர்மழைக் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இன்று வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் தேனி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version