கார் வைத்திருப்பவரா நீங்கள்?.. மழைக்காலங்களில் செய்ய வேண்டியது என்ன

எதிர்வரும் மழைக்கலாங்களில் கார் பயன்படுத்துவோர் அவற்றை பராமரிப்பது குறித்து, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை காணலாம்.

மழைக்காலங்களில் கார் பயன்பாடு குறைவாக இருப்பதால் என்ஜினின் இயக்கமும் குறைந்து பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் என்ஜினை அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போது தாமதமாக வாய்ப்புள்ளது.

எனவே கார் பயன்பாடு குறைந்தாலும் கூட மழை காலங்களில் தினமும் அதனை ஸ்டார்ட் செய்து ஒரு 10 நிமிடம் வரை என்ஜினை இயக்குவதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும். 

மழைக்காலங்களில் அதிகம் ஓடாத கார்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆக அதிக வாய்ப்புள்ளது. அதிக நேரம் தண்ணீரில் இருப்பது மட்டுமின்றி ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூப் பஞ்சர் ஆக வாய்ப்புள்ளது.

தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும்போது பம்பர் கிரில் வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் பேன் உள்ள திசையை நோக்கி செல்லும். அப்படி வந்த தண்ணீர் கூலிங் பேன் மோட்டார் மீது படும்போது, மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்பு அதிகம். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலங்களில் சீரானா இடைவெளியில் ஏர் பில்டரை பரிசோதிப்பது நல்லது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும்போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் பில்டரில் அடைப்பு ஏற்படலாம்.

அதேபோல், தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும்போது என்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக்கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு என்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம். 

Exit mobile version