‘புத்தாண்டு முதல் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்’ – உலக தங்க கவுன்சில் தகவல்

தங்கத்தின் தேவை அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் இறக்குமதி வழக்கமான அளவில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால் புத்தாண்டு முதல் விற்பனை அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version