வைகைப் புயலின் வீரியத்தை குறைத்த மாண்டஸ் புயல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் திரைப்படம் என்பதால், இதன்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ’மாண்டஸ் புயல்’ உருவாகியுள்ள காரணத்தால், இரண்டு நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

மழையின் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் காணும் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருப்பினும் நகைச்சுவை மன்னன் வடிவேலுவின் படம் என்பதால், வரும் நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version