தேனிலவுக்கு எங்கே செல்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நயன்தாரா வார்த்தைகளால் பதில் கூறாமல், உணர்வுகளுடன் தெரிவித்த மறுமொழி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சென்னையில் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விக்னேஷ் சிவன், தங்களுடைய திருமணம் சிறப்பாக நடந்தாகவும் வாழ்த்திய அனைவருக்கும், திருமணத்திற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்றி என்று பேசினார்.
அதை தொடர்ந்து பேசிய நயன்தாரா, ஆரம்பம் காலம் முதல் ஊடகத்தினர் தன்னை ஆதரித்து வருவதாகவும், வரும் காலங்களிலும் தன்னை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் நயன்தாராவிடம் தேனிலவு திட்டம் கொடுத்து கேள்வி எழுப்பினார். இதற்கு வெட்கப்பட்டு விக்னேஷ் சிவனை பார்த்து சிரித்துள்ளார் நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.