இன்னும் சில நாட்களில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்..!!

ranbir kapoor

பிரபல இந்தி சினிமா நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் வரும் 14-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘சாவரியா’ படம் ஹீரோவாக அறிமுகமானவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மகன் ஆவார். நடிகை கரீனா கபூரின் இளைய சகோதரர் மற்றும் மறைந்த நடிகர் ரிஷி கபூரின் பேரன் என்கிற அடையாளமும் இவருக்கு உண்டு.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவர், தன்னுடன் பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்த நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். நடிகை ஆலியா பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் இளைய மகள் ஆவார். இவர்களுடைய காதல் விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 13-ம் தேதி மெஹந்தி விழாவுடன் இவர்கள் திருமணம் தொடங்குகிறது. மொத்தம் நான்கு நாட்கள் நடக்கு திருமணத்தின் முகூர்த்த நாள் வரும் 14-ம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முறைப்படி ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் நடக்கிறது. பிரபல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோருக்கு திருமண அழைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Exit mobile version