சிலைகளை வைத்து நித்யானந்தாவுக்கு பூஜை- வெடிக்கும் ஜீவசமாதி சர்ச்சை..!!

nithyananda
Kailasa Nithyananda

கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் சிலைகளுக்கு வழிபாடு செய்யப்படும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை மரபில் இருந்தது கிடையாது. ஆனால் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நித்தியானந்தாவின் உருவச் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்படும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

இதனால் அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டாரா? அல்லது அவருக்கு உடநலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து நித்தியானந்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கைலாசாவில் சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.

அதனால் அவருடைய சிலைக்கு நீராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து அவருடைய தரப்பி உரிய பதில் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என அடியர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version