நீட் தேர்வு: அவகாசம் நீட்டிப்பு..!!

NEET Entrance Exam
NEET UG

வரும் கல்வியாண்டுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஆன்லைன் வாயிலாக துவங்கியது.

முன்னதாக விண்ணப்பிக்கும் கடைசி நாளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, நேற்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது அதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், வரும் 20-ம் தேதி இரவுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செலுத்துமாறு தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த முறை இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version