வரும் கல்வியாண்டுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஆன்லைன் வாயிலாக துவங்கியது.
முன்னதாக விண்ணப்பிக்கும் கடைசி நாளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, நேற்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது அதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், வரும் 20-ம் தேதி இரவுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செலுத்துமாறு தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த முறை இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.