போதை தலைக்கேறி பெண்கள் கழிவறைக்குள் புகுந்த பேராசிரியரை மாணவிகள் செருப்பால் அடித்து வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியிலுள்ள பி.யூ. என்ற கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருபவர் அமித் பசவமூர்த்தி. தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் இவருடைய நடவடிக்கையால் மாணவிகள், சக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு பிரச்னையாக இருந்து வந்தது.
குறிப்பாக மதுபோதையில் சக பெண் பேராசிரியர்களிடமும் மாணவிகளிடம் அமித் பசவமூர்த்தி தவறாக நடந்துகொண்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல மது அருந்திவிட்டு, போதையில் கல்லூரிக்கு வந்துள்ளார். சற்றும் எதிர்பாராத விதத்தில் அவர் பெண்கள் கழிவறைக்குள் புகுந்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள், அமித் பசவராஜை செருப்பால் அடித்து வெளியே தள்ளியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை ஒரு சிலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அதை பார்த்த காவல்துறையினர் ஆங்கில பேராசிரியர் அமித் பசவராஜ் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.