சேலத்தில் மதுபாட்டிலுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்- ஒரு வாரம் சஸ்பெண்ட்!

சேலம் மாவட்டம் ஆத்துார் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 19ம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் மது போதையிலும் , மதுபாட்டிலுடனும் வகுப்பறைக்கு வந்துள்ளனர். இச்சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர் சுரேஷ், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் இந்த சம்பவம் குறித்து விசாரித்தார் . பின்னர் 5 மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version