மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்: கர்நாடக டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் முழுவதும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்தது வந்த மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பற்றினர். இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அந்த குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பு இருந்ததை போலீசார் கண்பிடித்துள்ளனர். ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை.

இதுகுறித்து பேசிய கர்நாடக டிஜிபி, ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல என தெரிவித்துள்ளார். பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டோவில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version