சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 5 கிலோ குட்கா பறிமுதல் – வாலிபர் கைது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காத்திருப்பு அறையில் சந்தேகப்படும் படியாக ஒருவர் அமர்ந்து இருப்பதை போலீசார் கண்டனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 5 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் மத்தியபிரதேச மாநிலம் மத்தனபாடு பகுதியை சேர்ந்த தனராம் (வயது 28) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து பறிமுதல் செய்த குட்காவை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version