பெட்ரோல், டீசல் காசை கொடுத்தா கூட கொரோனா செலவுக்காகும் – ப.சிதம்பரம்

பெட்ரோல்-டீசல் வரியையும் ஏற்றியதன் மூலம் வரும் வருவாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொடுக்கலாம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.3 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறதாம். முன்பும் பல முறை கேட்டார்களே, மத்திய அரசு பணம் தரவில்லையே?

இது சம்பிரதாயமான கோரிக்கையா? அல்லது இந்த முறை மத்திய அரசு பணம் தரும் என்று நம்பி கேட்டார்களா? மத்திய அரசிடம் வருவாயும் இல்லை. இருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என்ற திட்டமும் இல்லை.

பெட்ரோல், டீசல் வரியையும் விலையையும் நாள்தோறும் ஏற்றி மக்களைக் கசக்கிப் பிழிகிறார்களே, அந்தப் பணத்தைக் கொரோனா தடுப்புச் செலவுகளுக்காக மாநில அரசுகளுக்குப் பிரித்துத் தந்தாலே போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version