தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது இரண்டு நாட்களாக மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருக்கின்றது. இதனையடுத்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியது யாதெனில், கன்னியாகுமாரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரமும் மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது எனவும், மேலும் எட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் எனவும் இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு ,அரபிக் கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version