சென்னையிடம் பஞ்சரான பஞ்சாப் அணி : வாட்சன்,டு பிளிசி அசத்தல்

வாட்சன்,டு பிளிசியின் அசூர ரன் வேட்டையால் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
watson du plessis

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 2 வது ஐ.பி.எல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த தொடரில் மீண்டும் ஒரு அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது .179 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் வாட்சன் களம் இறங்கினர்.இருவரும் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்த ,சென்னை அணி 8 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்து இருந்தனர்.பஞ்சாப் அணி பௌலர்கள் இந்த விக்கெட்களை எடுக்க திணற,9.5 வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது.

31 பந்துகளில் வாட்சன் இந்த தொடரில் முதல் அரை சதம் கடக்க,அவரை தொடர்ந்து டு பிளிஸியும் இந்த தொடரில் 3 வது அரை சதம் கடந்தார்.15 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்து இருந்தது.வாட்சன் மற்றும் டு பிளிசி தொடர்ந்து பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் பறக்க விட,18 பந்துகளில் 8 ரன்கள் சென்னை அணிக்கு தேவையாக இருக்க,சமி பந்தில் டு பிளிசி ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

டு பிளிசி 87 ரன்களுடனும்,வாட்சன் 83 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

53 பந்துகளில் 83 ரன்கள்(11 பௌண்டரி,3 சிக்ஸர்கள்)அடித்த ஷேன் வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version