பாஜக எஸ்சி அணி மாவட்ட தலைவர் படுகொலை- சென்னையில் பரபரப்பு..!!

BJP Balachander

பா.ஜ.க-வின் மத்திய சென்னைக்கான எஸ்.சி. பிரிவு தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பாலச்சந்தருக்கு ஏற்கனவே உயிருகன அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாவலர் தேநீர் அருந்த சென்ற நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் சாமி நாயக்கன் தெருவில் பாலச்சந்தர் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்து வெட்டி படுகொலை செய்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது.

அதன்மூலம் கைரேகளை கண்டறியும் விதமாக தடயவியல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்த வாகனத்தில் PRESS என்ற சிடிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால், அந்த வாகனம் யாருடையது என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதனால் கொலை நடந்த சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் போலீசார் குவிகப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, சென்னை கிழக்கு இணை ஆணையர் பிரபாகரன் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் பகலவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version