கள்ளக்காதலனின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், ஈரோட்டைச் சேர்ந்த உமா ரஞ்சினி என்கிற பெண்ணுடன் நீண்ட நாட்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதுகுறித்து அவர்களுடைய வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, ரமேஷ் மற்றும் உமா ரஞ்சினி இடையே பஞ்சாய்த்து செய்து இருவரையும் பிரிந்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த உமா ரஞ்சினி, ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து அவதூறாக எழுதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இதுதொடர்பாக கோயம்புத்தூர் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67bயின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.