சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 344 உயர்ந்து ரூ. 38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ. 1.20 அதிகரித்து ரூ. 65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபகாலமாக தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 344 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ. 43 அதிகரித்து ரூ. 4771-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நேற்றைய விலையில் இருந்து இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.20 உயர்ந்துள்ளது.
இதன்மூலம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.