மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை..!!

maharashtra woman death
arrest

நெல்லையில் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அருகேவுள்ள சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு சுமதி என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மகள்களுடன் சேர்ந்து சுமதி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதற்காக மூத்த மகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை அதை வாங்கிக் குடிக்காமல் கையை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து வர சென்றுவிட்டது. அந்தநேரத்தில் தனது இரண்டாவது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு சுமதியும் குடித்துவிட்டார்.

அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாடசாமி சுமதி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுமதி தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version