தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

student died

திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் மாணவன் இறந்துபோனதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் திருமுருகன். அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த 24-ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார்.

அன்றைய நாளே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாணவன் சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version