மேற்கூரை இடிந்து விபத்து: கர்ப்பிணி மகள், தாய் உயிரிழப்பு..!!

thoothukudi tragic death
maharashtra man

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி மகள் மற்றும் அவருடைய தாயார் இடிபாடுகளில் சிக்கில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் தனது மனைவி காளியம்மாள் உடன் அண்ணாநகர் 3-வது தெருவில் வசித்து வருகிறார். இவர்களுடையே மகள் கார்த்திகா மார்த்தாண்டாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மகள் கர்ப்பமான நிலையில், அவருக்கு வளைகாப்பு நடத்தி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு முத்துராமனும் காளியம்மாளும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று மூவரும் வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் காளியம்மாள் மற்றும் கார்த்திகா படுத்திருந்த இடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

வீட்டின் ஓரமாக படுத்து கொண்டிருந்த முத்துராமன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் தொடர்பாக அறிந்த காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர்.

அதை தொடர்ந்து உடல்களை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முத்துராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version