பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை கைது செய்த காவல்துறையினர், போக்சோ வழக்கில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருடைய தாயார் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து தாத்தா பாட்டி வீட்டுக்கு அருகாமையிலுள்ள பள்ளியில் சிறுமி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நபர் மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது நாளிடைவில் காதலாக மாறியது. இதனால் மாணவியும் அந்த இளைஞரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை முடியாமல் போயுள்ளது. உடனடியாக அவரை தாத்தா பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்து பார்த்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் தாத்தா பாட்டிக்கு கூறியுள்ளது. அவர்கள் கேட்டதில் மாணவி தனது காதலன் குறித்து விபரங்களை வெளியிட்டார். மேலும், அவர்கள் போலீசிலிடம் புகார் அளித்தனர். அதன் மூலம் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்துவரும் நிலையில் மாணவியில் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இளைஞர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.