மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்; மீட்புப் பணி தீவிரம்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் Upper Trishuli நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 63 பேர் இந்தியர்கள் என இன்று வெளியான புதிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசுவா பகுதியில் உள்ள Upper Trishuli நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் வெள்ளத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்.
நேபாள ராணுவத்தினர் கடுமையான வானிலை மற்றும் வெள்ள அபாயத்துக்கு மத்தியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதுவரை 350 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
