சீனாவில் கொரோனாவால் தினசரி 9 ஆயிரம் பேர் பலி..! அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்றின் ஊற்றாக கருதப்படும் சீனாவில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஊகான் நகரில் 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்த அலைகளை உருவாக்கி உலகையே 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்துள்ள கூறி வந்த சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் மேலோங்கி உள்ளது.சீனாவில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான நாட்களில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கசிந்தது.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது போன்ற வீடியோக்களும் வெளிவந்து உலக நாடுகளை திடுக்கிட வைத்தது. அதன் பின்னர், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகளை வெளியிடுவதை அந்நாடு நிறுத்தியது.

இதனிடையே, நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே போல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

ரஷ்யா, ருமேனியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version