Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

இனி லோன் போட்டு கார் வாங்கி ஏமாத்த முடியாது..டொயோட்டோ நிறுவனத்தின் புதிய பிளான்

August 21, 2020
கடன் திட்டத்தில் கார்களை வாங்கி மோசடி செய்யும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் புதிய கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், குறைந்த அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே ரொக்க தொகையை செலுத்தி கார்களை வாங்குகின்றனர். பெரும்பாலான கார்கள் விற்பனை கடன் திட்டத்தில்தான் வாங்கப்படுகின்றன.


இந்நிலையில், கார்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களில் முறைகேடுகளும், மோசடிகளும் அதிகரித்து வருகிறது. ஒரு சில வாடிக்கையாளர்கள் கடனுக்கான மாதத் தவணைகளை சரிவர செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுகின்றனர். அவற்றில் அரசியல், ஆயுத பலம் கொண்டவர்களிடம் இருந்து காரையும் மீட்க முடியாமல், கடன் தொகையையும் திரும்ப வசூலிக்க முடியாமல் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் நஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றன.

“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னையில் பயங்கரம்! பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்

டெடி பியர் உடையில் நடந்து சென்று ரூ.5.3 லட்சம் நிதி! எவ்வளவு தூரம் நடந்தார் தெரியுமா?

இதனை கருத்தில்கொண்டு, தான் கடன் வழங்கும் அனைத்து கார்களிலும் விசேஷ தொழில்நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கார்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், அதனை இந்திய சப்ளையர்களிடம் இருந்து மிக சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலனை செய்து வருவதாகவும் டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதன் மூலமாக, கார் திருடுபோனால் எளிதாக கண்காணிக்க முடியும். மேலும், திருடு போகும் வாய்ப்பு இருப்பதை வைத்து காப்பீட்டு கட்டணமும் கூடுதலாக நிர்ணயிக்கப்படுகிறது. ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு விற்பனை செய்தால், காப்பீட்டு கட்டணம் குறைக்க வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

குறிப்பாக, காரை கடனில் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை கண்டறிவதற்கும், கார் எங்குள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் கடன் வழங்கும் எங்களது நிறுவனத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பலர் காரை கடனில் வாங்கி மாதத் தவணைகளை செலுத்தாமல் காரை மறைத்து வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கபடுகிறது. சிலர் விற்பனை செய்தாலும், அந்த கார் எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய இந்த சாதனம் உதவும் என்று டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் கருதுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு டொயோட்டா கார்களுக்கு, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் மூலமாகவே கடன் வசதி செய்து தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரருக்கு நிச்சயதார்த்தம்! வாழ்த்து தெரிவித்த அணி வீரர்கள்!!

Next Post

தல ஆட்டத்தில எப்பவும் போல சிக்சர் அதிகம் பயிற்சி பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ விஸ்வநாதன்!!

Next Post

தல ஆட்டத்தில எப்பவும் போல சிக்சர் அதிகம் பயிற்சி பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ விஸ்வநாதன்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version