Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பட்டியல் தயார்

August 21, 2021

தமிழகம் முழுவதும் கடன் தள்ளுபடி திட்டத்துக்காக கூட்டுறவு வங்கி நகை கடன்தாரர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒரே நாளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் விடுப்பு; அதிரடி காட்டிய அரசு!

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

இந்நிலையில், கூட்டுறவு சங்க நகை கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடன் தள்ளுபடி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகை அடமானம் வைத்தவர்கள் பட்டியல் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நகை அடமானம் வைத்திருப்பவர்கள் இரு சக்கர வாகனம், கார் வைத்திருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இது தொடர்பாக உண்மை நிலையை அறியவட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது.

மேலும், கடன்தாரர் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியால் பலன் அடைந்துள்ளாரா? அரசு ஊழியரா? கூட்டுறவு சங்க ஊழியரா? அரசு மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் உறவினரா? அவரது குடும்பத்தில் வேறு நபர்கள் கடன் பெற்றுள்ளார்களா? சிறு, குறு, பெரு விவசாயியா? எவ்வளவு கடன் பெற்றுள்ளார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கான நிபந்தனைகள் அறிவிக்கப்படும். அதன்படி அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், இரு சக்கர வாகனம், கார்வைத்திருப்பவர்கள், ஏற்கெனவே நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படாது என அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கூறுகையில், இதற்கு முன் செய்யப்பட்ட நகை கடன் தள்ளுபடிகளால் கூட்டுறவு வங்கிகள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ளன.

இந்நிலையில், 5 பவுன் வரை நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பால், பெரும்பாலானோர் வட்டியையும் கட்டவில்லை. பணத்தையும் திருப்பித் தந்து நகையை மீட்கவில்லை.

இதனால் கூட்டுறவு சங்கங்களில் வரவு, செலவு முடங்கிபணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.85 ஆயிரம் கோடி வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட இருப்பதால், பயனாளிகளை தேர்வு செய்வதில் கடும் நிபந்தனைகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆப்கான் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுங்கள் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

Next Post

மீண்டும் எகிறும் தங்கம் விலை

Next Post

மீண்டும் எகிறும் தங்கம் விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version