Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வணிகம்

கடன் தவணை-தனியார் துறை வங்கிகள் எதிர்ப்பு

July 28, 2020

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ரூ.30,000 கோடி அரசு பத்திரங்களை திரும்ப வாங்க திட்டம்; RBI மூலம் ஏலம்!

 வங்கி கடன் தவணை செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட சலுகையை நீட்டிக்கக் கூடாது என, தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மார்ச், 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அனைத்து கடன்களுக்கான தவணை செலுத்துவதை, மார்ச்-மே வரை, ரிசர்வ் வங்கி தள்ளி வைத்தது. பின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் வரை, சலுகையும் நீட்டிக்கப்பட்டது.அதன்படி, கடன்தாரர்கள், செப்., முதல் கடன் தவணையை செலுத்த வேண்டும். இந்நிலையில், நேற்று(ஜூலை 27), ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றார்.
முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், எச்.டி.எப்.சி., தலைவர், தீபக் பரேக், சக்திகாந்த தாஸிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதன் விபரம்: ஏற்கனவே, வங்கிகள் வாராக் கடன் சுமையால் தவித்து வருகின்றன. கொரோனாவால் இந்த சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளின் மொத்த வாராக் கடன், 2021, மார்ச்சில், 12.5 சதவீதமாக உயரும். கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தவறி, பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டால், வாராக் கடன், 14.7 சதவீதமாக உயரும்.
இதில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 11.3 சதவீதத்தில் இருந்து, 15.2 சதவீதமாக அதிகரிக்கும். இது, தனியார் வங்கிகளில், 4.2 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக உயரும் என, ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஊரடங்கு காரணமாக, வங்கி கடன் தவணையை ஆறு மாதங்களுக்கு செலுத்துவதில், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை, வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்கக் கூடாது. வசதி உள்ளவர்களும், இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி, கடன் தவணையை செலுத்தாமல் உள்ளனர்.
ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தவணை சலுகையை, மேலும் நீட்டித்தால், அது ஒட்டுமொத்த வங்கித் துறையை பெருமளவும் பாதிக்கும். எனவே, ஆகஸ்ட் மாதத்திற்கு மேல், கடன் தவணை சலுகையை நீட்டிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்து சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, ஆறு மாதங்களுக்கு கடன் தவணை செலுத்துவது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
அதனால், அது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. எனினும், கடன் தவணை சலுகை தொடர்பான பரிசீலனையின் போது, தீபக் பரேக்கின் கருத்தும் ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ., தவணை சலுகையை நீட்டிக்க கூடாது என, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, எச்.டி.எப்.சி.,யைத் தொடர்ந்து, தனியார் துறையைச் சேர்ந்த மேலும் பல வங்கிகள், சலுகை நீட்டிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வானிலை- ‘மவுசம்’ செயலி

Next Post

மத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது – நடிகர் கார்த்தி

Next Post

மத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது - நடிகர் கார்த்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version