Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சாதனை மனிதர்கள்

அடையாறின் ஆலமரம் சாய்ந்தது – சாதனை மனுஷி சாந்தா

January 19, 2021

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 65 ஆண்டுகள் சேவை செய்து மறைந்த மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு பெரும் இழப்பு. அவரது வாழ்க்கை வரலாறு இதோ.

சென்னை மயிலாப்பூரில் 1927-ம் ஆண்டு பிறந்த சாந்தா, புகழ்பெற்ற வி்ஞ்ஞானி சர்.சி.வி. ராமனின் குடும்ப வழித்தோன்றல் ஆவார். சாந்தாவின் தாத்தாவுடைய சகோதரர்தான் சர்.சி.வி. ராமன். அறிவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமன். அவர்கள் வழியில் சாந்தாவும் இயற்பியல் துறையில் சாதிக்க வேண்டும் என குடும்பத்தினர் விரும்ப,  மருத்துவத்தில் சாதனை படைக்க வேண்டும் என எண்ணினார் சாந்தா.

சாந்தா எப்போதும் நினைவுக் கூரப்படுவார் – பிரதமர் மோடி புகழாரம்

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் 2021-22-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை – முதலமைச்சர் அறிவிப்பு

மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பப் படிப்பை தொடங்கிய சாந்தா, 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955-ம் ஆண்டில் எம்.டி எனப்படும் முதுநிலை மருத்துவர் பட்டத்தையும் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், 1955-ம் ஆண்டில் தன்னையும் ஓர் அங்கமாக சேர்த்துக்கொண்ட சாந்தா,

பின்னர் அந்த மருத்துவமனையை உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றியதில் பெரும் பங்காற்றினார்.அந்தக் காலக்கட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. புற்றுநோய் என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற அச்சம் படித்தவர்களுக்கும் இருந்தது. அதையெல்லாம் களைந்து, புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய பெருமைக்குரியது அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம். 12 பேருடன் செயல்பட்ட மருத்துவமனையை விரிவுபடுத்தியதில் மருத்துவர் சாந்தாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

65 ஆண்டுகளாக அடையாறு மருத்துவமனையில் சேவை புரிந்த சாந்தா, 1984 முதல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்து வந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழு உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

அவரது சேவையை பாராட்டி மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்த சாந்தா, தள்ளாத வயதிலும் தளாரமல் மருத்துவ சேவை ெசய்து மறைந்துள்ளார். அனைவரின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே டாக்டர் சாந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அணிவகுத்து நின்ற 24 போலீசார் துப்பாக்கியை தாழ்த்தி மீண்டும் மரியாதை செலுத்தினர். பின்னர் 24 போலீசார் அரசு மரியாதை செலுத்தும் வகையில் வானை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட, 72 குண்டுகள் முழங்க டாக்டர் சாந்தாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..!

Next Post

இயக்குனர் சசிகுமாரின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் வைரல்…!

Next Post

இயக்குனர் சசிகுமாரின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் வைரல்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version