Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

விவசாயிகள் கொலை விவகாரம்; உ.பி அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை- உச்சநீதிமன்றம்

October 8, 2021

லக்கீம்பூர் வன்முறை உயிரிழப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

டெல்லி, உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீதான வன்முறை மற்றும் உயிரிழப்பு தொடர்பான நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இரண்டாவது முறையாக இன்று விசாரணக்கு வந்தது. அப்போது உ.பி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சல்வே, லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரதரதில் சம்பந்தமுடையதாக கூறப்படும் ஆஷிஸ் மிஷ்ரவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இன்று நேரில் ஆஜராகவில்லை என்பதால் நாளை காலை 11 மணி வரை அவருக்கு அவகாசம் வழங்கி உள்ளோம். அப்போதும் அவர் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக்களை வேறு ஒருவர் சந்திக்கிறார் என்றால் அவருங்கு இப்படித்தான் அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்து கொண்டு இருப்பீர்களா? அந்த நபரை இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இச்சம்பவம் மோசமாக நடந்திருக்கிறது; 8 பேர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச்சூடு, நடந்திருக்கிறது இத்தனை தீவிரமான விசயத்தை இப்படி தான் கையாளுவீர்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உத்தர பிரதேச அரசும், காவல்துறையும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தனர்.

தெரு நாய் விவகாரம் – அவசர மனுவாக ஏற்க முடியாது!

தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை ஆகாது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்பு

அதற்கு பதிலளித்த உ.பி. அரசு தரப்பிலான வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே, சம்பந்தப்பட்ட நபருக்கு நாளை காலை வரை நேரில் ஆஜராக வாய்ப்பு கொடுத்துள்ளதால் ஒருநாள் மட்டும் எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302ன் ( கொலை வழக்கு ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு நீங்கள் அழைப்பானை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்களா? என மீண்டும் கேள்வி எழுப்பியதோடு, உத்தரபிரதேச அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.மேலும், லக்கீம்பூர் விவகாரத்தில் உ.பி. அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை எனவும், அறிக்கையில் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ,சிறப்பு புலனாய்வு விசாரண நடத்துவதாகவும் கூறப்பட்டாலும் அது வெறும் அறிக்கை வடிவில் வார்த்தைகளிலேயே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை என்றனர். இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதா ?
எனவும் வினவினர், அதற்கு உத்தர பிரதேச அரசு தரப்பில் சி.பி.ஐ விசாரணையை மாநில அரசு கோரவில்லை!!

அதேவேளையில் இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது என்பதால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே, அந்த விசாரணையில் திருப்தி இல்லை என நீதிமன்றம் கருதினால் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது என்பது உங்களுக்கும் தெரியும்!! எனவே வேறு விசாரணை அதிகாரிகளை தான் பார்க்க வேண்டும். எனவே தற்போதைய நிலையில் மாநில அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரம் ஆவணங்கள் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை காவல்துறை டி.ஜி.பி.யிடம் அறிவுறுத்துங்கள் என உ.பி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணையும், நடவடிக்கை இருக்கும், தேவைப்பட்டால் மாற்று விசாரணை அமைப்பு வைத்து வழக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் உ.பி அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் உ.பி. காவல்துறையின் உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாபாப்பு உறுதி செய்யப்படும் எனவும் உத்தர பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உத்தரவாதம் அளித்துள்ளார். உ.பி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை ஏற்று இந்த வழக்கு தசரா விடுமுறைக்கு பின்னர் உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை நீதுபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஊழல் செய்ய நினைச்சாலே அவ்ளோ தான்… உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு!!

Next Post

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்… அரசு சுற்றறிக்கை

Next Post

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்… அரசு சுற்றறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version