நாடு முழுவதிலும் கடந்த சில நாட்களாகவே விண்ணை முட்டும் அளவில் தக்காளியின் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் நாட்டில் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்தனர். வரத்து குறைவு மற்றும் மழையின் காரணமாக தக்காளியின் விலையானது அதிகரித்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை கூட விற்பனைக்கு கொண்டு வந்தது.இந்த சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாகாணத்தில் யாரும் எதிர்பார்த்திராத வகையினில் தக்காளியின விலையானது புதிய உச்சத்தினை தொட்டு இருக்கிறது. உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு தக்காளியின் விலையானது கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அங்குள்ள மக்கள் எல்லோரும் தக்காளி வாங்கவே யோசிக்கும் நிலையே உருவாகி உள்ளது என அந்த வட்டார செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.