89 வயதில் மறைவு; 35 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
நார்வே மன்னர் ஹரால்ட் 5-வது, தனது 89-வது வயதில் இன்று காலமானார். இதையடுத்து அவரது மகன் பட்டத்து இளவரசர் ஹாக்கோன், நார்வேயின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்னர் ஹரால்ட், சிகிச்சை பலனின்றி காலமானதாக நார்வே அரச குடும்பம் அறிவித்துள்ளது. 1991-ஆம் ஆண்டு தனது தந்தை மன்னர் ஒலாவ் 5-வது மறைவுக்குப் பிறகு நார்வேயின் மன்னராக ஹரால்ட் பொறுப்பேற்றார். கடந்த 35 ஆண்டுகளாக அவர் மன்னராக இருந்து வந்தார்.
நார்வே அரச குடும்பத்தை நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் முக்கியப் பங்காற்றியவராக ஹரால்ட் கருதப்பட்டார்.
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் மக்களுடன் நேரடியாக உரையாடியதன் மூலம் நார்வே மக்களிடையே அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். மன்னர் ஹரால்டின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன் அரசராகியுள்ளார். இதன்மூலம் நார்வே அரச குடும்பத்தில் புதிய தலைமுறை ஆட்சி தொடங்கியுள்ளது. ஹாக்கோனின் மகள் இங்க்ரிட் அலெக்சாண்ட்ரா தற்போது பட்டத்து இளவரசியாகியுள்ளார். மன்னர் ஹரால்டின் மறைவுக்கு நார்வே மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






