ஊரடங்கிற்கு பிறகு ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞருக்கு இரு கிட்னிகளும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் பலர் ஜிம்மில் கடுமையாக உழைத்து கட்டுமஸ்தான உடலை பராமரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக பலர் ஜிம்மே கதி என கிடப்பதும் உண்டு. அந்த வகையில்
டெல்லியை சேர்ந்த 18 வயதான லக்ஷய பிந்திரா எனும் இளைஞரும் தினமும் ஜிம்முக்கு போவதை பழக்கமாக கொண்டுள்ளார். ஜிம்முக்கு செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட அந்த இளைஞர் காலை, மாலை என இருவேளையும் ஜிம்முக்கு போய் உடலை மெருகேற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக ஜிம்களை மூட அரசாங்கம் உத்தரவிட்டது. .இதனால் மூன்று மாதமாக லக்ஷன் பிந்திராவால் ஜிம்க்கு போய் உடறயிற்சி செய்ய முடியவில்லை.
மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஜிம் திறந்ததும, அதிக ஆர்வத்துடன் ஜிம்முக்கு சென்றவர் மூன்று மாத பயிற்சியையும் சேர்த்து செய்ய தொடங்கியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது , அவரின் இரண்டு கிட்னியும் செயலிழந்து போனதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் .இதனால் அவருக்கு உடனே டயாலிசில் சிகிச்சை தொடங்கப்பட்டது .இப்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .
ஆர்வ மிகுதியால் அதிகப்படியான உடற்பயிற்சியில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது எனவும் , தகுந்த பயிற்சியாளர் உதவியோடு மட்டுமே எந்த பயிற்சியையும் செய்யவேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.




