Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு ஏன் தெற்கு ரயில்வே விளக்கம்!!!

August 18, 2020

ரயில்வே பணிகளில் தமிழர்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக  எழுந்த  குற்றச்சாட்டுக்கு தெற்கு ரெயில்வே விளக்கம் தந்துள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இனி விடுமுறை நாட்களில் 401 ரயில் சேவை : சென்னையில் நாளை முதல் அமல்

சென்னையில் இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சில நாட்களுக்கு  முன் திருச்சியிலுள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில்  வேலை காலியாக இருந்த  மொத்தம் 503 பணியாளர்கள் பதவிக்கு தமிழகத்திலிருந்து 4 பேர் மட்டுமே தேர்வு  செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள  அனைத்து  வேலைகளுக்கும் வடமாநிலத்தவர்கள்  பணியில் அமர்த்தப்பட்டனர். கொரோனா  ஊரடங்கு காலத்திலும், அவர்கள்  பல்வேறு இடங்களில் இருந்து  திருச்சிக்கு வந்து  வேலை தொடர்பான ஆவன சரிபார்ப்பில் கலந்துகொண்டு  பணி நிமித்தம் பெற்றது தமிழகத்தில்  பெரிய கொந்தளிப்பை  உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வண்ணம் தெற்கு ரயில்வே இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு இருக்கிறது அதில் பின்வருமாறு ;

ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் என்பது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தனி வாரியம்.இது சென்னை மட்டுமின்றி அகமதாபாத் ,திருவனந்தபுரம், பெங்களூரு ,மற்றும் மொத்தம் 27 இடங்களில் செயல்படுகின்றது.இந்த தேர்வாணையத்தை பொருத்தவரை பொது அறிவிப்பின் மூலமே அனைத்து மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. இதிலுள்ள 21 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு நாம் விண்ணப்பிக்க முடியும் அப்படி விண்ணப்பிக்கும்  பட்சத்தில் ஒருவர் திருச்சி ,சென்னை, அல்லது சேலம், போல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தை  மட்டும் தேர்வு செய்ய வேண்டும் அப்படித் தேர்வு செய்தபின் வேறு எந்த வாரியத்திற்கும் அவரால் விண்ணப்பிக்க இயலாது

ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) இந்தவகையான தேர்வை  எந்த ஒளிவுமறைவும்   இன்றி நடத்தி வருகிறது.   தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள்  தரப்படுகிறது,  தேர்வுகளும் கணினி மூலமாகவே நடத்தப்படுகிறது. தகுதி அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு  பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். கணினி வழியாக தமிழ் உள்பட  சுமார் 15 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே காலி பணியிடங்களுக்கு, தனிப்பட்ட  ஒரு   மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  நடத்தப்படும் தேர்வு இது கிடையாது. தமிழ்நாட்டை சேர்ந்த  பிரதிநிதிகள் சென்னைக்கு மட்டுமல்லாமல், வேறு ஆர்.ஆர்.பி.  வாரியத்திற்கும்விண்ணப்பித்து உள்ளார்கள்.  எடுத்துக்காட்டாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.2 லட்சம் பேர் தமிழ்நாடு மட்டுமின்றி தென் மேற்கு ரெயில்வேயில் உள்ள ஆர்.ஆர்.பி. பெங்களூருக்கு  விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

அதேபோல் அப்ரண்டிஸ் பயிற்சி  நடத்துவது என்பது பணிமனை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயிற்சி  வழங்குவதற்காக மட்டுமே  உருவாக்கியுள்ள ஒன்று.  இதனை முடித்தவர்களுக்கு வேலை உறுதி  செய்யப்படும் என்கிற நிலை  எப்போதும் ரெயில்வேயில் கிடையாது.  அவனாலும் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே வாரியம்,சுமார் 20 சதவீத அப்ரண்டிஸ்களை முதல் நிலை பணிகளுக்கு தேர்வு செய்து கொள்ளுங்கள் என ஒப்புதல் அளித்துள்ளது இதன் அடிப்படையில்  மொத்தம் 597 பணியிடங்கள் அப்ரண்டிஸ்களுக்கு  மட்டும் ஒதுக்கப்பட்டது.இதில் மொத்தம் 3,627 விண்ணப்பங்கள் அப்ரண்டிஸ்களிடம் இருந்து  பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2,839 பேர் தேர்வுகளை எழுதி உள்ளனர்.  அவர்களில் 272 பேர் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். இறுதியில் 54 பேர் மட்டும் அவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றார்கள்

 சென்ற2018-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீஷியன்கள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு எப்போதும் போலவே 21 வாரியங்களுக்கு பொதுவான அறிவிப்பாகவே வெளியிடப்பட்டது. 

லோகோ பைலட்டுகளுக்கான  பணிக்கு கல்வித் தகுதியாகஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு  இருக்க வேண்டும். ஆனால் டெக்னீசியன்களுக்கு  அப்படி இருக்க அவசியமில்லை ஐ.டி.ஐ படிப்பு  இருந்தாலே போதும். பொறியியல் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் ‘டெக்னீசியன்’ பணியிடங்களுக்கு ஏற்றவர்கள் அல்ல.

 அதன் அடிப்படையில் சென்னை ஐ.சி.எப். மற்றும் திருச்சி பொன்மலை பணிமனை உள்பட காலி பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 51 சதவீதம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள் என்பதை சென்னை வாரியம்  தெரிவித்துள்ளது. மொத்தம் 3,218 விண்ணப்பதாரர்கள் துணை ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீசியன்’ பணிகளுக்காக மட்டும்  தேர்வு செய்யப்பட்டார்கள்.  இதில் சுமார் 17 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்துதான்தேர்வு  செய்யப்பட்டுள்ளார்கள். 

நாம் ஏற்கனவே கூறியது போல் டிப்ளமோ மற்றும் என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதி பெறாததற்கு காரணம், ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே ‘டெக்னீசியன்’ வேலைக்கு தகுதியானவர்  என்ற நிலைதான்.ஆனாலும் அதே  நேரத்தில், தமிழகத்தில் இருந்து 53 சதவீதம் பேர் துணை ‘லோகோ பைலட்டுகள்’ வேலைகளுக்குதேர்வாகி இருக்கிறார்கள். தெற்கு ரெயில்வேயின் பணியாளர் நலப்பிரிவு துறையின்  அனைத்து உரிய செயல்முறை மேற்கொண்டதற்கு பின்னரே 541 பேர் திருச்சி பொன்மலை பணிமனையின்  தற்போது டெக்னீசியன் பணியிடங்களுக்கு  அமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

27 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு..அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா

Next Post

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Next Post

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version