தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 7 புதிய தொழில் நிறுவனங்களை முதல்வர் இன்று தொடங்கி டைத்தார். பின்னர், 10 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்றைய தினம் முதல்வர் வணிக ரூபாய் 1,298 கோடி மதிப்பிலான 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்தார். பின்னர். ரூபாய் 10,062 கோடி மதிப்பிலான 9 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்: திருவள்ளூர், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
ஸ்ரீபெரும்புதூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.
மோட்டார், மின் உபகரணம்
வத்தலகுண்டில் 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் உற்பத்தி திட்டம். வாலாஜாபேட்டையில் 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டையில் 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். காஞ்சிபுரம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.
ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நிறுவனத்தின் உற்பத்தி திட்டம்.
அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்கள்:
காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சோலார் உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர், வல்லூரில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் லாஜிஸ்டிக் பார்க் திட்டம். வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் உற்பத்தி திட்டம்.
தளவாட உற்பத்தி
தூத்துக்குடி, மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.
விழுப்புரம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி திட்டம். திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கேஸ் விநியோக திட்டம்.
பம்புகள் உற்பத்தி
திருவள்ளூர், தேர்வாய்கண்டிகையில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார்பன் உற்பத்தி திட்டம். கோயம்புத்தூர், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பம்புகள் உற்பத்தி திட்டம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




