நிவர் புயல் காரணமாக பன்ருட்டியில் 1000 ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிவர் புயல்
நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலைவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் 28 செ.மீட்டர் மழையும், பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
1000 ஏக்கர் மூழ்கியது
கனமழை காரணமாக கடலூரில் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக, பண்ருட்டி பகுதியில் அவியனூர், அழகு பெருமாள் குப்பம், பேரங்கியூர் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. மேலும், கரும்பு தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பலத்தக் காற்று வீசியதால், குமணன்குளம், நடவீரப்பட்டு, பாலூர் பகுதியில் வாழை மரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.




