அம்மா வங்கிக்கணக்கில் இருந்து 11 லட்சம் அபேஸ் செய்த 6 வயது சிறுவன் கேமில் வந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் அமைந்திருக்கிறது வில்டன் என்ற டவுன் பகுதி. இப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், ஆன்லைனில் கேம் விளையாட, தனது அம்மாவின் ஆப்பிள் அக்கவுண்டில் இருந்து 16 ஆயிரம் டாலர்கள் பயன்படுத்தி உள்ளான். இது இந்திய மதிப்பில் 11 இலட்ச ரூபாய் ஆகும்.
ஜியார்ஜ் ஜான்சன் எனும் சிறுவன், ஜெஸிக்காவின் (சிறுவனின் தாய்) ஐ-பாட் பயன்படுத்தி அதன் மூலம் பணத்தை பயன்படுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணத்தால், ஜெஸிக்கா வீட்டில் இருந்து வேலை செய்து வந்ததால், இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது. ஜெஸிக்காவிற்கு தனது இளம் மகனுக்கு ஆன்லைனில் இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்றே, அறிந்திருக்கவில்லை. ஜூலை மாதம் ஜான்சன் Add-on பூஸ்டர்கள் மூலம் கேமில் புதிய கதாபாத்திரங்கள் வாங்க பயன்படுத்தியுள்ளார். சில விளையாட்டுகளின் சிறப்பம்சங்கள் பெற என தொடர்ந்து ஐ-பாட் மூலம் பணம் செலவழித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் 1.99 டாலர்களில் துவங்கிய இது, காலப்போக்கில் 99.99 டாலர்களாக உயர்ந்தது. ஜூலை 9ம் தேதி வாக்கில் ஜார்ஜ் ஜான்சன் 2500 டாலர்கள் வரை செலவழித்திருந்தார். ஆரம்பத்தில் ஜெஸிக்கா இது ஏதோ ஆன்லைன் திருட்டு என்று நினைத்திருக்கிறார். ஆப்பிள் மற்றும் பே-பால் நிறுவனத்திடம் ரீஃபண்ட் செய்வதற்காக முறையிட்ட போது தான், ஜெஸிக்காவிற்கு உண்மை நிலவரம் புரிய வந்தது.
ஜூலை மாத இறுதியில் 16 ஆயிரம் டாலர்களை கடந்தவிட்டது. ஜெஸிக்கா ஜூலை மாதம் பிராடு நடந்துள்ளது என்று புகார் அளிக்கவே சென்றிருக்கிறார். அக்டோபர் மாதம் தான், எவ்வளவு பணம், எந்தெந்த வகையில், எந்தெந்த விளையாட்டு நிறுவனங்களுக்கு பரிமாற்றம் நடந்துள்ளது என்ற முழு தகவல் பெற்றார் ஜெஸிக்கா..பண பரிமாற்றம் நடந்த 60 நாட்களுக்குள் தங்களை தொடர்பு கொண்டால் தான் பணத்தை திருப்பி அளிக்க முயற்சிகள் எடுக்க முடியும் என பே-பால் நிறுவனம் கூறிவிட்டது. பிராடு செய்யப்பட்டதாக நினைத்து வந்த ஜெஸிக்காவிற்கு, தனது மகனின் திருவிளையாடல் தான் இது என அறியவே அக்டோபர் மாதம் ஆகிவிட்டது.
Read more – பணிப் பெண்ணுக்கு உணவாக 3.67 லட்சம் மதிப்புள்ள டிப்ஸ் : மனிதநேயம் கொண்ட வாடிக்கையாளர்
அவரவர் தங்கள் மொபைலில் வங்கிக்கணக்குகளை பாதுகாப்பாக வைக்கவும் குழந்தைகள் ஆக்ஸஸ் செய்யும் வகையில் எளிமையாக வைக்க வேண்டாம் என்றும் ஜெஸிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர், உண்மையான வாழ்க்கை என்ன, போலியான டிஜிட்டல் வாழ்க்கை என்ன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும், என்பதற்கு ஜெஸிக்கா, ஜான்சனின் வாழ்க்கை ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.




