18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சி வழங்க இலங்கை அரசு புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பு:
இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா வலியுறுத்தியுள்ளார்.
Read more – அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை துணை செயலாளராக திருநங்கை ரேச்சல் லெவின் : ஜோ பைடன் அறிவிப்பு
இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா கூறியதாவது: இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக கூறினார். மேலும், அவர் இலங்கையின் நன்மையை கருத்தில் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.




