Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து அரசு மேல்முறையீடு!

November 16, 2021


வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி 26ஆம் தேதி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னதாக, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்தது. இதற்கு மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.

தெரு நாய் விவகாரம் – அவசர மனுவாக ஏற்க முடியாது!

தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை ஆகாது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்பு

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த இட இதுக்கீட்டு அரசாரணையை ரத்து செய்தது. அப்போது, “சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்கள் தொகை, சமூகக் கல்வி நிலை மற்றும் பிற சேவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் ஆகிய தரவுகளும் இல்லாமல் இந்தச் சட்டம் அரசால் இயற்றப்பட்டுள்ளது” என கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

இதனிடையே 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில், பல்லாயிரக்கணக்கானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் தமிழக அரசு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டை மீறவில்லை. மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முஸ்லீம் மற்றும் அருந்ததி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது தவறானது. இந்த உத்தரவால் தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பாலியல் தொல்லைக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்? பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை!!

Next Post

காஜல் அகர்வாலுக்கு பதிலாக இனி இவர்…. கமலுடன் இணையும் பிரபல நடிகை

Next Post

காஜல் அகர்வாலுக்கு பதிலாக இனி இவர்…. கமலுடன் இணையும் பிரபல நடிகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version