தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு ஆகஸ்டு 22ம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023ம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ₹1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில் 50% அரசுப்பள்ளி மாணவர்களும், 50% தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிவாய்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.




